சேலம் அய்யந்திருமாளிகை நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் மாணவ, மாணவியர் இல்லத்திலும் மற்றும் ஏற்காடு அடிவாரம் நேசக்கரங்கள் மூத்தோர் இல்லத்திலும் ஆங்கில புத்தாண்டு (01.01.2021) மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. இல்ல தலைவர் எஸ்.செல்லதுரை அவர்கள் தலைமை தாங்கினார்.
இல்ல நிறுவன செயலாளர் என்.பெரியசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். புத்தாண்டு பிறப்பதற்கு முன்னதாக இதயம் நிறைவு தியான மையம் சார்பாக கஸ்தூரி அவர்கள் தியான பயிற்சி பற்றி விளக்கினார். பின்னர் சின்னு பாண்டியராஜன் தலைமையில் நகைசுவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இல்ல குழந்தைகள் மற்றும் மூத்தோர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இல்ல பொருளாளர் பாலசங்கர் அனைவர்க்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்,
விழாவில் அலுவலக மேலாளர்கள் துரைசாமி, சுப்பிரமணியன், உதவி மேலாளர் கோவிந்தராஜ், இல்ல கண்காணிப்பாளர் சண்முகபிரியா, தெய்வராஜன், விடுதி வார்டன் கோமதி, பானு, மகாதேவன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.